தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட திருகோணமலைவாசிகள் கைது !

தமிழகத்திற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட திருகோணமலைவாசிகள் 13பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணை முன்னெடுத்து வரும் கடற்படையினர் அவர்களை பொலிஸாரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *