ராஜபக்ஷ அரசால் அச்சிடப்பட்ட 300,000 மில்லியன் ரூபா !

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 300,000 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டதால் அதிக பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

இன்று, நாடு பணவீக்கத்தை அல்ல, அதிக பணவீக்கத்தை எதிர்கொள்கிறது என்றார். நாடு சிக்கலான நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு தீர்வு கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கறுப்புச் சந்தையில் இடம்பெறும் பொருளாதாரப் பணவீக்கம் எங்கும் எழுதப்படவில்லை எனவும் கறுப்புச் சந்தையில் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 30,000 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *