இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பு !

கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கையுடன் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முக்கியமானது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நிதித் தலைவர்கள் நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *