ரஷ்ய விமானம் இடைநிறுத்தப்பட்ட சம்பவம் – அமெரிக்காவை திருப்திப்படுத்த முனைகிறதா ரணில் தரப்பு..?

நேற்றைய தினம் இலங்கை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட முக்கியமான விடயம் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனத்தின் விமானத்தை இலங்கை இடைநிறுத்தியிருந்த விடயமாகும். அடுத்தடுத்த சர்வதேச ஊடகங்கள் கூட இது தொடர்பில் செய்திகளை அதிகம் வெளியிட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் உதவியை இலங்கை முன்னதாக எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் சர்வதேசநாணய நிதியத்தையும் – மேற்கத்திய நாடுகளையும் மையப்படுத்திய வகையில் இலங்கை நகர ஆரமப்பித்துள்ளதன் எதிரொலியாகவே இந்த சம்பவத்தை பார்க்க முடிகிறது. ரஷ்ய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி மேற்கத்திய – முக்கியமாக அமெரிக்க – பிரித்தானிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை நகர்வது போல தோன்றுகிறது.

இந்த வருடம்  மகிந்த பிரதமராக இருந்த போது ரஷ்ய – உக்ரைன் விவகாரம் தொடர்பில் எந்த பக்கமான முடிவையும் எங்களால் எடுக்க முடியாது என இலங்கை குறிப்பிட்டிருந்ததது.இந்த நிலையில் ரணில் பிரேமதாசவின் வருகையை தொடர்ந்து ரஷ்யாவுடனான நட்பு நிலை மேலும் விரிசல் நிலையை எட்டியுள்ளது.

எரிபொருள் உதவி முன்னதாக கோரப்பட்ட நிலையில் அது தொடர்பில் இன்று பேச்சே இல்லை. இதனை அண்மையில் ஜே.வி.பி சுட்டிக்காட்டியிருந்ததது. இதன் அடுத்த கட்டமாக ரஷ்யவிமானம் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கு தொடருமாயின் ரஷ்யாவுடனான உறவு வெளியுறவுக்கொள்ளை மிக வேகமாக பாதிக்கப்படவாய்ப்புள்ள அதே நேரம்  தீவிரமாக இலங்கை மேற்கத்திய நாடுகளுக்கு வளைந்து கொடுப்பதானது இலங்கை அமெரிக்காவி்ன் கைப்பொம்மை ஆவதற்கான இன்னும் கூடுதல் வாய்ப்புக்களை ஏற்படுத்தும். சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி போன்றவற்றின் கடன்கள் பிரச்சினைகளை தீரப்பது போல தோன்றினாலும் அவை அப்படி இல்லை.  இன்னுமொரு கிரீஸ் ஆக இலங்கை மாறிவிடும் என பல தரப்பினரும் எச்சரித்தும் வருகின்றனர்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *