உணவுப்பற்றாக்குறையால் 20வீதமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு !

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 20% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையே போஷாக்கின்மைக்குக் காரணம் எனக் கூறப்பட்டாலும், குழந்தைகளுக்கு அதிகளவு காய்கறிகளை உண்ணக் கொடுத்தால் இந்த நிலைமையைத் தவிர்க்க முடியும் என மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“கடந்த வாரம் மருத்துவமனையின் வார்டு எண் 02 இல் 53 குழந்தைகளை பரிசோதித்தோம். அவர்களில், 20% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்பதை நாங்கள்அறிந்தோம். அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது ஒரு சவாலான சூழ்நிலை.

“குழந்தைகள் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் விற்றமின்கள் தேவையான அளவுகளில் பெறாததே இதற்குக் காரணம். குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு, குழந்தைக்கு ஊட்டச்சத்தை வழங்க தாய்மாருக்கு தாய்ப்பால் போதுமானதாக இல்லை, எனவே தாய்மாருக்கு சில உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *