“பனம்பழத்திலிருந்து சவர்க்காரம் – மாட்டுச்சாணத்திலிருந்து எரிவாயு” – வடக்கில் மீளும் தற்சார்பு.
அண்மையில், சவர்க்காரத்தின் விலையை 100%இற்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால், இலங்கையில் சவர்க்காரத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது.
சவர்க்காரம் மாத்திரமல்லாது நாட்டில் அனைத்துப் பொருட்களதும் விலைவாசிகள் பல மடங்கில் எகிறிச் செல்கிறது.
சமூக வலைத்தளங்களில் இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=8184048254942480&id=100000121595176
இதே நேரம் அனைவரும் ஹாஸ் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்காக வரிசையில் முட்டிமோதிக்கொண்டு உள்ள நிலையில் வவுனியாவில் வசிக்கும் அரியரட்ணம் முரளிதரன் எனும் பாடசாலை அதிபர் ஒருவர் உணவுக்கழிவுகள் மற்றும் மாட்டுச்சாணம் என்பவற்றை கொண்டு சமைப்பதற்கு தேவையான உயிரியல் வாயுவை தயாரித்து தனது முகநூலில் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார்.
உண்மையிலேயே இன்றைய நிலையில் இது மிக அவசியமானதாகவும் நம் அனைவருக்கும் முன்மாதிரியானதும் கூட . எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளிடமும் – இறக்குமதியாளர்களிடமும் கையேந்தி நிற்காது நமக்கான தை நாமே உருவாக்கும் தற்சார்புக்கு திரும்புவதே இன்றைய பிரச்சினைகளுக்கும் – வரிசைக்கலாச்சாரத்துக்கும் – பொருளாதார நெருக்கடிக்குமான தீர்வாகும்.