சர்வாதிகாரம் ஒழியட்டும் கியூபாவில் மக்கள் போராட்டம் – அமெரிக்காவின் சதி என்கிறார் கியூப ஜனாதிபதி !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 381 பேருக்கு  25 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்துள்ளது. இவர்களில் 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும். சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” “எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்,”  என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்குவர் என்று அனைத்தின் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, “பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை” என்று அவர் சாடினார். நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *