“ஜனாதிபதி கோட்டாபய மனதை தயார்படுத்த வேண்டும்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

“அதிகாரத்தை விட்டுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போதாவது மனதை தயார்படுத்த வேண்டும். அதிகார போட்டி காரணமாக தாமதமாகி வரும் உத்தேச 21வது அரசியலமைப்புத் திருத்தத்தை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாடலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் போராட்டங்கள் ஓய்ந்துள்ளதாக அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும்.  21ஆவது திருத்தச் சட்டத்தை தாமதப்படுத்துவது அரசாங்கத்தையும், நாட்டையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும்.

ஜனாதிபதியைச் சுற்றியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை தாமதப்படுத்துவது தவறாகும். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அதனை நிறைவேற்ற துரிதப்படுத்த வேண்டும் வேண்டும்.

சர்வதேச உதவியை நாட வேண்டுமானால், அதற்கு ஏற்றாற்போல் எமது செயற்பாடுகளை சரிசெய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *