“நாடாளுமன்றில் இருப்பதில் எந்த பயனுமில்லை. நான் போகிறேன்.”- வடிவேல் சுரேஷ் ஆவேசம் !

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் மலையக மக்களுக்கு உண்பதற்கு கூட வழியில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சபையில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,

இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரி​வாயு இல்லை, பெட்ரோல் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆக, இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த அவர், நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *