உக்ரைன் – ரஷ்ய போரின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் கொள்கைகளின் மூலக்கல்லாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். .

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு சர்வதேச நாணய நிதியமும் பங்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீண்ட கால அடிப்படையில் அரபு நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு அல்லது டொலர்களைப் பெறுவதற்கான ஒரு முறையைப் பாதுகாக்கும் முறைமை அமல்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இலங்கையால் டொலரைப் பாதுகாக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் வட்டி செலுத்தப்படுவதால் அதிக டொலர்களைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை ஏன் பெற முடியாது என கேள்வி எழுப்பிய அவர், அத்தகைய நடவடிக்கையில் உள்ள முரண்பாடு தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *