நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
……….
ஜனநாயக ரீதியிலான தேர்தலில் போட்டியிட்டு மக்களின் விருப்பத்தால் தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ திறமையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க தேசியப்பட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட தம்மிக்க பெரேராவுக்கு கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த அமைச்சுக்கு மையை கொடுத்துள்ளார். முன்னாதாகவும் தேசியப்பட்டியல் ஆசனமூடாக தெரிவான பசில் ராஜபக்ஷ வின் திறமையற்ற நிர்வாகமே இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பல தரப்பினரும் விசனம் வெளியிட்டு வரும் நிலையில் நாட்டு மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை தொடர்ந்து தன் இஷ்டத்துக்கு பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.