most-tracked flight ஆக சாதனை படைத்த கோட்டாபாய பயணித்த விமானம் – சிங்கப்பூரில் கோட்டபாய !

வுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவிலிருந்து கோட்டாப ராஜபக்ஷ சென்ற SV788 விமானம் சற்று நேரத்திற்கு மன்னர் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

இதேநேரம்  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் அது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் கோட்டபாய ராஜபக்ஷ பயணித்த சௌதி அரேபியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தை ஏராளமானோர் தேடியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை அதிகமானோரினால் கண்காணிக்கப்பட்ட விமானமாக (most-tracked flight) இது மாறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புளூம்பேர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Flightradar24.com இணையதளத் தரவுகளின்படி, GMT 7:43 வரை 5,000க்கும் மேற்பட்ட பயனர்கள் “Saudia flight 788” ஐத் தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *