தெரிவானார் இலங்கையின் புதிய ஜனாதிபதி – தலைகீழான முடிவுகள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.

 

வாக்கு விபரம் ;

 

வேட்பாளர் வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க 134
டலஸ் அழகப்பெரும 81
அனுரகுமார திஸாநாயக்க 03
செல்லுபடியற்ற வாக்குகள் 04
அழிக்கப்படாத வாக்குகள் 02
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *