கோட்டா கோ கம மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு – மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை !

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அமைதி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த கும்பலை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட போராட்ட இடத்தை சுற்றி கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மே 09 தாக்குதலின் பின்னர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் சட்டத்தை அமுல்படுத்துவதிலும் பொலிஸ் மா அதிபர் தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *