“2019 ஏப்ரல் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் இன்னமும் அரசியலில் உள்ளனர்” – கர்தினால் மல்கம்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்றுவரை அரசியலில் ஈடுபட்டும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாக பணியாற்றியும் வருகின்றனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முகத்த்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப்  பெருவிழாவில் பிரசங்கம் ஆற்றிய போதே கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :-

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை மறைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாட்டின் சக்திவாய்ந்த நபர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்தனர். 2019 இல் மூன்று தேவாலயங்கள் மற்றும் ஒரு சில ஹோட்டல்களில் குண்டுகளை வீசியவர்கள் இன்னும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக நீதிக்கான எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கத்தோலிக்கர்களாகிய நாம் நீதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலம் வாய்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த தேவாலயத்தில் கைக்குண்டை வைத்திருந்தனர். இருப்பினும் காப்பாளர்கள் உட்பட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் சில ஆவணங்களில் கையொப்பம் இட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *