மலைச்சிறுத்தையின் உயிரிழப்பு – வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !

மலைச்சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணமான நல்லதன்னிய வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வனவிலங்கு அதிகாரிகள் மரத்தை வெட்டும் போடும் போது அது சிறுத்தையின் மீது விழுந்து சிறுத்தை உயிரிழந்தமை விசாரணையின் போது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹற்றன் அருகே டிக்கோயா வனராஜா தோட்டத்தில் மரக்கிளையில் சிக்கிய சிறுத்தையை காப்பாற்றும் முயற்சியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி காட்சிகள் தெரிவிக்கின்றன.

வேட்டையாடுபவர்கள் போட்ட கயிற்றில் சிக்கிய சிறுத்தை, கயிற்றை உடைத்து மரத்தின் மீது ஏறி, முட்கம்பியில் சிக்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *