காக்கிச் சட்டைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்குகள் தகுதி அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பினைக் கண்டித்து பல வழக்கறிஞர்கள் தாங்கள் வழக்குகளின் வக்காலத்துக்களை வாபஸ் பெற்று வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுமக்களே நீதிமன்றத்தில் ஆஜராகி தமிழில் வாதாடி வருகிறார்கள். விசாரணையும் தமிழில் நடைபெற்றது. நீதிபதி கலிபுல்லா மற்றும் நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தமிழிலேயே 146 வழக்குகளை விசாரித்து முடித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதன்முறையாகும்.