இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தை ஹக் செய்த பாடசாலை மாணவன் – திணறும் பரீட்சை திணைக்களம் !

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தை ஹக் செய்த பாடசாலை மாணவன் குற்றப் புலனாய்வு பிரிவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து , ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளை திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தினை போல தான் தனியான இணையத்தளத்தை அமைத்திருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தந்திரோபாய ரீதியாக டெலிகிராம் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவரின் இணையப் web portal ஹக் செய்த பின்னர் , அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர் .

சுமார் 5,000 மாணவர்கள் குழுவைக் கொண்ட டெலிகிராம் குழுவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹக் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்கள். அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருப்பதாக குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சகோதரிகளில் ஒருவர் பல்கலைக்கழகத்திலும் , மற்றைய சகோதரி உயர்தர வகுப்பிலும் படித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளியாகியுள்ள உயர்தரமாணவரகளின் பெறுபேறுகள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து பல தரப்பினரும் கேள்விகளை எழுப்பியவண்ணமுள்ளனர்.

இந்த நிலையில் , வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் பரீட்சை திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகள் 100 வீதம் சரியானவை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.ஜி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த காலியில் உள்ள பாடசாலையொன்றின் உயர்தர மாணவன் சில சட்டவிரோத செயலில் ஈடுபட முற்பட்டுள்ளதாகவும் சட்ட திணைக்களத்தினால் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்னமும் சரியாக வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்திடம் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் பெறுபேறுகள் பத்திரமாக இருப்பதாகவும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *