யாழ்ப்பாணத்தில் ஜோடியாக குடைகளுக்குள் செல்வதால் கலாசார சீர்கேடு என்கிறார் யாழ். மாநகர சபை உறுப்பினர் !

யாழ். ஆரியகுளமானது தற்போது கொழும்பு காலிமுகத்திடலை விட மிக மோசமான அளவிற்கு சென்று கொண்டிருப்பதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.

ஆரியகுளத்து சூழலில் ஜோடியாக குடைகளுடன் சென்று பொழுத்தினை கழிக்க அனுமதிக்கின்றார்கள், இது ஒரு கலாசார சீர்கேட்டிற்கு ஆரம்பமாகும்.

பண்ணை கடற்கரை இதே போன்று பண்ணை கடற்கரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. மகிழ்வீட்டுத் திடல் என்று சொல்லக்கூடிய அவ்விடத்திற்கு குடும்பத்துடன் சென்று பொழுதினை கழிக்க வேண்டுமே தவிர இவ்வாறான அநாகரிகமான செயல்களை யாழ். நகர மத்தியில் நடத்துவது என்பது தவறானதாகும்.

எதிர்காலத்தில் எங்கள் சமுதாயத்தினருக்கு இவ்வாறான விடயங்கள் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக இனி வருகின்ற கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகவும்  சுட்டிக்கட்டியுள்ளார்.

………………………

யாழ்பாணத்தில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே தீவிரமடைந்துவருகிறது, இது போக தனியார் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பால் இலவச கல்வியின் தரம் சீர்கெடுகிறது, பாடசாலைகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மேலோங்கியுள்ளன இவையெல்லாம் இந்த அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. மொழி – மதம்-கலாசாரம் என பழைய புராணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டு இன்னமும் இந்த தமிழ்சமூகத்தை பாதாளத்துக்குள் தள்ளத்தான் பார்க்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள். மாநகர சபை உறுப்பினர் கூறுவது போல கலாச்சார சீரழிவுகள் எவையும் இடம்பெறுவதாக குறித்த பகுதியில் தெரியவில்லை. அது பொழுதுபோக்கு இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காதலர்கள் வருவதும் வழமையாகியுள்ளது. பண்ணை கடற்கரை பகுதியிலும் இதே நிலை தான். இது தவிர யாழ்ப்பாண பல்கலைகழக காதல் ஜோடிகள் அதிகமாக உலா வருகின்றனர். இது அவரவர் தனிப்பட்ட விருப்பம். யாழ். மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் கூறுவது போல கலாச்சாரத்தை சீரழிக்க தான் வருகிறார்கள் என்றால் ரகசியமான பல இடங்களுக்கு அவர்கள் செல்ல முடியும். பொதுவெளிக்கு ஏன் வரவேண்டும் என்ற அடிப்படையைான சிந்தனை கூட இல்லை.

ஒரே குடையில் செல்வதால் யாழ்ப்பாணத்து சமூனம் சீரழிந்து விட்டது என கூறும் இந்த அரசியல்வாதிகள் சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் – இஅதனால் ஏற்பட்ட – ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அபத்தங்கள் பற்றியெல்லாம் பேசுவது இல்லை. ஏதாவது ஒரு கிழமைக்கான ஊடக அறிவிப்பை வெளியிட்டு தங்களுடைய பெயர்களை நினைவுபடுத்துவதே இந்த வகையறா அரசியல்வாதிகளின் நோக்கம் மற்றும் படி சமூகமாற்றம் எல்லாம் துளியுமில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *