ஆசிய தடகளப் போட்டியில் சாதனை படைக்க தயாராகவிருக்கும் தமிழ் இளைஞன் புவிதரன் – உதவ முன்வருவார்களா அனுசரணையாளர்கள் ?

ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதிகாண் போட்டி இன்று தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திறந்த வயது பிரிவிற்கான கோலூன்றிப்பாய்தல் தகுதிகாண் போட்டியில் இராணுவ மெய்வல்லுநர் போட்டி வீரராக பிரதிநிதித்துவம் செய்த சிறிகந்தராசா புவிதரன் 5.15m பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவராகிய இவர் இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் கோலூன்றி பாய்தலில் சாதனைகளை பதிவு செய்துள்ளார். இவருக்கான பயிற்சிகளை கணாதீபன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 3 தடவைகள் அடுத்தடுத்து தவறவிட்ட புவிதரன், இன்று நடைபெற்ற மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார். தற்போது புவிதரனிடம் இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும். எனவே இலங்கை சாதனையை முறியடிக்க அந்த கோலின் உயரம் போதாதது. அதுமாத்திரமின்றி, தற்போதைய சந்தையில் கோலொன்றின் விலை 5 இலட்சம் ரூபாவாக உள்ளதுடன், அதை வாங்குகின்ற வசதியும் புவிதரனுக்கு இல்லை. தேசிய சாதனையாளர் புவிதரனிற்கு புதிய கோலொன்றினை கொள்வனவு செய்வதற்கு அனுசரணையாளர்கள் முன் வர வேண்டும், அவர் மேலும் பிரகாசிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். எனவும் கோரப்பட்டுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *