குழந்தைகளுக்கான போசாக்கு உணவை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் !

கிளிநொச்சி புண்ணை நீராவி பகுதியில் தமது குழந்தைகளுக்கான போசாக்கு உணவை வழங்குமாறு கோரி பெற்றோர்கள் (25) இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி பகுதியில் இயங்கி வரும் திருச்சபை ஒன்றின் ஊடாக குறித்த பிரதேசத்தில் உள்ள 334 சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருவதுடன் மாலை நேர கற்றல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் குறித்த திருச்சபையில் இடம் பெற்ற நிர்வாக சிக்கல்காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மாலை நேர கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வழங்குகின்ற செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரி கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திருச்சபை ஊடாக 334 சிறுவர்கள் மாலை நேர கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் இதில் 81 சிறுவர்கள் போசாக்கு குறைவானவர்களாக   இருப்பதாகவும் அவர்களுக்கான குறித்த போசாக்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *