மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி – முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்கிறார் ஜார்ஜியா மெலோனி !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஜார்ஜியா மெலோனி தலைமையிலான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து ஜார்ஜியா மெலோனி பிரதமராக தேர்வு பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி ‘ தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். 2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *