தொடரும் பொருளாதார நெருக்கடி – வடக்கில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் !

வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 246 சிறுவர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் பெற்றோர்களால் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம் என வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் குருபரன் ராஜேந்திரன் ஆங்கில நாளிதழொன்றுக்கு தெரிவித்துள்ளார் .

இதேவேளை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்மார்கள் வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குருபரன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் திறைசேரியில் இருந்து வழங்கப்பட வேண்டிய நிதியானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திற்கு முறையாகப் பெற்றுக் கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
இதற்குக் காரணம் அரசாங்கம் எதிர்நோக்கும் கடுமையான நிதி நெருக்கடிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *