காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

யாழில் காணொளி பதிவை வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்களே இவ்வாறு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வவலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பயிலும் 15 வயது மாணவியுடன் இளைஞன் ஒருவன் காணொளி உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான்.

மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடலை குறித்த இளைஞன் பதிவு செய்துள்ளான். பதிவு செய்த அந்த காணொளியை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அனுப்பியுள்ளான்.

அவ்வாறு கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளான். அதேவேளை, இந்த காணொளி பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

மாணவி கல்வி கற்கும் பாடசாலை சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து காணொளியை பதிவு செய்த இளைஞனுக்கும், அதனை பயன்படுத்தி மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞனையும் சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *