பாடசாலை அதிபர் ஒருவர் கசிப்பு விற்பனை செய்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, கிராதுருகொட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரே இரண்டு போத்தல் கசிப்புடன் கிராதுருகோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் அண்மைக் காலமாக சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு அதிபரிடம் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த வியாபாரத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.