கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோட்டம் – அறிக்கையை கோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கோரியுள்ளார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே ஜனாதிபதியினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதோடு , இந்த சந்தர்ப்பத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சுமார் 50 – 60 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

குளிக்கும் போது இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே பின்னர் மோதலாகி , அங்கு பதற்றமான சூழல் ஏற்படக் காரணம் என ஆரம்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாறு மோதலில் ஈடுபட்ட தரப்பினர் புனர்வாழ்வு மையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் ஆகயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட கைலப்பினால் நான்கு கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த எவருக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. மோதலில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வருபவர்களாவர்.

தப்பிச் சென்றுள்ள கைதிகளை கைது செய்வதற்காக இராணுவத்தினரால் வீதித் தடைகளை அமைக்கப்பட்டு சோதனைகளும் , கண்காணிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *