இலங்கையில் குரங்குகாய்ச்சல் நோயுடன் மேலுமொரு நபர் அடையாளம் !

மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்றுறுதியான இரண்டாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த ஒருவர், மங்கிபொக்ஸ் தொற்றுடன் கடந்த 3 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

இவர் குரங்கம்மையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபராவார்.

களனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *