முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் “பொருளாதார கொலையாளிகள் மத்தியில்” நூல் வெளியீடு !

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், “பொருளாதார கொலையாளிகள் மத்தியில்” என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் . இப்புத்த்தகத்தின் விலை ரூ.2500 .
இந்நூல் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.

பொருளாதார கொலையாளிகள் மத்தியில்' என்ற நூலை வெளியிட்ட அஜித் நிவார்ட்  கப்ரால்! - தமிழ்வின்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட வழக்கில் முன்னிலையான கப்ரால் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்திற்கு வெளியே, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை அறிந்து இரவில் நிம்மதியாக எப்படி உறங்குகிறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கப்ரால்,

“என்னால் நன்றாக தூங்க முடிகிறது. மக்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான்தான் செயல்பட்டு நாட்டை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றினேன். மக்கள் எதையும் சொல்லலாம்.” என தெரிவித்திருந்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *