நாட்டை நாசமாக்கிவிட்டு “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் – சஜித் காட்டம் !

பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற ராஜபக்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் “பொருளாதார கொலையாளிகளுக்கு மத்தியில்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மறுபுறம் இந்நாட்டில் ஜனநாயகப் போராட்டத்திற்காக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,வசந்த முதலிகே ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும், இது ஒரு விசித்திரமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொடம்கஸ்லந்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்க முன்நின்ற சில பிரதான தலைவர்களில் முன் நிலையில் இருந்த ஒருவரான நிவார்ட் கப்ரால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தானும் தனது கும்பலும் செய்த பொருளாதாரக் குற்றங்களைப் பற்றி புத்தகங்கள் எழுதும்போது, இந்நாட்டை பொருளாதார ரீதியில் வங்குரோத்துச் செய்து பாரிய பொருளாதார குற்றங்களை இழைத்த கும்பலுக்கு எதிராக வீதியில் இறங்கிய சங்கைக்குரிய சிறிதம்ம தேரர்,முதலிகே உள்ளிட்டோரை சிறையில் அடைத்தமை என்னவொரு அநியாயமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார குற்றத்தைச் செய்த கும்பலே சரி என்றால் சிறையில் இருக்க வேண்டும் எனவும்,ஆனால் பொருளாதாரக் கொலையைத் தடுக்கப் போராடிய குழுவைச் சிறையிலடைக்கும் நிலையே நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தற்போது தேர்தலொன்றையே கோருவதாகவும்,அதனைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி போராடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *