நீண்ட காலம் மின் கட்டணம் செலுத்தப்படாமையால் யாழ். ஸ்ரீதர் திரையரங்கில் இயங்கி வரும் ஈ.பி.டிபி கட்சியின் தலைமை அலுவலகம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் குறித்த கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டண நிலுவை நீண்டகாலமாக செலுத்தப்படாமையால் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.