“கஞ்சாவின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” – அமைச்சர் டயானா கமகே பூரிப்பு !

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.

“இந்த மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி புரிந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால்தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன். அடுத்த ஆண்டு கஞ்சா உற்பத்தி மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்டுவர எதிர்பார்க்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *