ஐஸ் போதைக்கு அடிமையான சுமார் 400 பேர் தினமும் விளக்கமறியலில் வைக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது 26,000ஐ தாண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.