ஓமானில் பணிக்குச் சென்ற இலங்கை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மனித கடத்தலுக்கு எதிராக தான் செயற்பட்டு வருவதாகவும், தனக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு மூன்றாவது செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.