மே மாதம் 9 ஆம் திகதி காலி முக்திடலில் ‘கோட்டா கோகம’ போராட்டத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 9) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறி 5 ஆர்வலர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோரை எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.