6வயது சிறுவனை தாக்கிக் கொலைசெய்த தாயின் சட்டரீதியற்ற கணவர்!

தாயின் சட்டரீதியற்ற கணவர் எனக் கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் பஹல்கம பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனை மீட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், சிறுவனின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தின் பேரில் கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *