பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அப்பியாசக் கொப்பிகளின் விலையை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்தும் அதிக விலைக்கு அவற்றினதும் பாடசாலை உபகரணங்களினதும் விலைகளை மாற்றி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அப்பியாசக் கொப்பிகள், புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பெற்றோரிடமிருந்து பலமுறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை அவதானித்த நிலையிலேயே சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.