குடிபோதையில் முதலாம் வருட மாணவனை தாக்கிய சிரேஷ்டமாணவன் – பேராதனை பல்கலைக்கழகத்தில் சம்பவம் !

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அதே பீடத்தின் முதலாம் வருட மாணவனை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காயமடைந்த முதலாம் வருட மாணவன் மருத்துவ சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பல்கலைக்கழகத்தின் Ivar Jennigs விடுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கலைப்பீட முதலாம் வருட மாணவன் எனவும், அவர் நோர்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த போது நான்கு மாணவர்கள் வந்ததாகவும் அவர்களில் ஒருவர் தன்னை தாக்கியதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *