தனது வளர்ப்பு நாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஜனாதிபதி ஆலோசகர்  பேராசிரியர் ஆஷு மாரசிங்க – அம்பலப்படுத்திய ஹிருணிகா!

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர்  பேராசிரியர், ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது இராஜினாமா குறித்து விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னாள் எம்.பி ஹிருணிக்கா பிரேமசந்திர பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார்.

,அந்தவகையில், ஆஷு மாரசிங்க தனது வளர்ப்பு நாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளதாக, குறிப்பிட்டுள்ள  ஹிருணிக்கா, அவர் பதவி விலகியுள்ள போதும், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் ஆஷு மாரசிங்க வளர்ப்பு நாயை துஷ்பிரயோகம் செய்யும் காணொளியை அவரது காதலியே ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஆஷு மாரசிங்க பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த பதவி விலகலானது உடன் அமுலாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *