பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டம் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

தேசிய பாதுகாப்பு சட்டத்தை அடுத்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக கூறினார்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் காலம் காலமாக காணப்படும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் உண்மையான நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கும் வகையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை போன்று ஒரு விசேட ஆணைக்குழுவை உருவாக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *