ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானை என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பெண் ஒருவருடன் பிரச்சினை எழுந்ததாகவும், அதற்காக ஆஷு மாரசிங்கவிடமட அதிக பணம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆஷு மாரசிங்க தனது வளர்ப்பு நாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் காணொளிகள் வெளியாகியுள்ளதாகவும் – அவர் பதவி விலகியுள்ள போதும், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஹிருணிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.