இந்தியப் பிரதமரின் தலைமைச் செயலாளர் – ஜனாதிபதி இன்று சந்திப்பு

nayar.jpg இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமரின் கொள்கை அமுல்படுத்தலுக்கான தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ. நாயிர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின்பேரில் ரி.கே.ஏ. நாயிர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ரி.கே.ஏ. நாயிரின் பாரியார், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,  மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோருடன் வெளிவிவகாரம், நிதி, சுகாதாரம், கல்வி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    இந்திய பிரதமரின் கடிவாளமே அன்னை சோனியா கையில் இருக்கும் போது அவரது செயலாளர் வந்து என்னத்தை கிழிக்க முடியும். இதுக்கு பேசாமல் ராகுலையோ அல்லது பிரியங்கவையோ அனுப்பி இருக்கலாம்.

    Reply
  • malan
    malan

    THEY ARE PLASTERING AND PAITING THE POLITICAL DRAMA STAGE AND SHOW WIIL PLAY SOON. THATS AS WE ALL KNOW ELECTION.

    Reply