இலங்கையில் 24 லட்சம் வறுமையில் – செஞ்சிலுவை சங்கம் அறிக்கை !

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, தற்போதைய நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் இலங்கை நாட்டின் மக்கள் தொகையில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுந்துள்ளனர்.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11% பேர், அதாவது 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

நெருக்கடியின் தொடக்கத்தில் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்ததாக அது கூறுகிறது.

அக்குடும்பங்கள் சொத்துக்களை விற்று கடனாளிகளாக ஆவதற்கும் , அவர்களின் சாப்பாட்டைக் குறைத்து, பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 26%, அதாவது 57 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அறிக்கை காட்டுகிறது.

இந்த நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்த நெருக்கடி 3.45 மில்லியனுக்கும் அதிகமான விவசாய மக்களையும், 2.43 மில்லியனுக்கும் அதிகமான ஊட்டச்சத்து தேவையுள்ள மக்களையும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *