யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 5 ஆம் திகதி, விவசாய பீட கேட்போர் கூடத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை, இந்தியாவில் இருந்து வரும், இயற்கை விவசாயம் தொடர்பான விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளதாகவும், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாயிகள் பயன் பெற வேண்டும் எனவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி சீவரத்தினம் வசந்தரூபா தெரிவித்துள்ளார்.
நேற்று, கிளிநொச்சியில் உள்ள விவசாய பீடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.