“போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கடலட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கிராஞ்சி பகுதிக்கு இன்று (07)  விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கடற்தொழிக்கு  இடையூறாக அமைந்துள்ள அட்டைப்பண்ணைகளை அகற்றக் கோரி இன்று நுாறாவது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மக்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  தாங்கள் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் தங்களுடைய வாழ்வாதார தொழில்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அட்டைத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டு  வரும்  மக்களினுடைய கோரிக்கைகள் நியாயமாக காணப்படுமாயின் அதுதொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *