தலாய் லாமாவை இலங்கைக்கு அழைத்தமை தொடர்பில் சீனா விசனம் !

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் மல்வத்து மகாநாயக்க தேரர் திம்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த இலங்கையின் பதில் சீன தூதுவர் Hu Wei இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் வரவேற்பதை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

14ஆவது தலாய் லாமா துறவி மட்டுமல்ல எனவும் மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும் சீன விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவராக காணப்படுவதாகவும் பதில் சீன தூதர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இலங்கை தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது திபெத்தின் சுதந்திரத்தை மேம்படுத்துவதோடு, சீனா – இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை பாதிக்கச் செய்யும் எனவும் பதில் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த மகா சங்கத்தினர், திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *