இலங்கையில் 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன – பனை அபிவிருத்தி சபை

வடமாகாணத்தில் பனை செய்கையை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வருடம் புதிதாக 100,000 பனை மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தேவையான கன்றுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் இதுவரை 11 மில்லியன் பனை மரங்கள் நடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *