அரகலய மக்கள் இயக்கத்தில் பங்குபற்றியவர்களால் சட்டமா அதிபரிடம் 12,000 சத்தியகடதாசிகள் சமர்பிப்பு !

அரகலய மக்கள் இயக்கத்தில் பங்குபற்றியவர்களால் இன்று சட்டமா அதிபரிடம் 12,000 சத்தியகடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமைக்கு எதிராக சத்தியக்கடதாசிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வசந்த முதலிகே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது ஏன் என சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *