“திருடன் கையில சாவி” – யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் பொலிஸ் அதிகாரிகள் !

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் குறிப்பிட்ட அளவை போலீசார் கைப்பற்றி தங்கள் சுய லாபத்திற்காக விற்கின்ற நிலையும் நீடிக்கின்றது. கடந்த காலங்களில் பல போலீஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இப்படியான அதிகாரிகளை வைத்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது என்பது திருடன் கையில் இருக்கும் சாவிக்கு நிகரானது என சமூக வலைத்தளங்களில் பலர்  பதிவிட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *