“தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வதை ஏனைய பங்காளி கட்சிகளே விரும்பவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் களமிறங்க தமிழரசுக் கட்சி தயாராகவே இருந்தது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், இருப்பினும் அதனை ஏனைய தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் முடிவு எடுப்பதற்கு முன்னர் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மற்ற கட்சிகள் மீறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சி பெருவாரியான வெற்றியை பெறும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்தை அமைத்திட அனைவரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி உள்ளூராட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்கின்ற பங்காளி கட்சிகள் எம்.ஏ சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து பிளவு பட செய்தார் என குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *