பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரிடமிருந்து 145 மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரில் பயணித்தபோது, பதுளை முதியங்கனை விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் வைத்து, ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலகஸ்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான மருத்துவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.